மேலும்

சிறிலங்காவுக்கு போர் விமானங்களை விற்க இந்தியா முயற்சி – உறுதிப்படுத்துகிறது இந்திய ஊடகம்

Tejas jetசிறிலங்கா விமானப்படைக்கு, போர் விமானங்களை வழங்குவதற்கு இந்தியாவும், சீனாவும் முன்வந்திருக்கின்றன என்பதை சுயாதீனமான வட்டாரங்கள் உறுதி செய்திருப்பதாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா விமானப்படை பழைய, கிபிர் மற்றும் மிக்- 27 போர் விமானங்களுக்குப் பதிலாக, புதிய நவீன போர் விமானங்களைக் கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள பின்னணியில், பாகிஸ்தானின் ஜே.எவ்- 17 போர் விமானங்களை சிறிலங்கா விமானப்படை வாங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இதனை சிறிலங்கா விமானப்படை வட்டாரங்கள் மறுத்திருந்தன.

இந்தநிலையில், இந்தியாவும் சிறிலங்கா விமானப்படைக்கு தேஜஸ் போர் விமானங்களை வழங்க முன்வந்திருப்பதாக நேற்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இந்தநிலையில், சிறிலங்கா விமானப்படையின், இஸ்ரேலியத் தயாரிப்பான கிபிர் மற்றும் ரஷ்யத் தயாரிப்பாக மிக்-27 போர் விமானங்களுக்குப் பதிலீடாக, தமது நாட்டுத் தயாரிப்பான போர் விமானங்களை வழங்க இந்தியாவும், பாகிஸ்தானும் முன்வந்திருப்பதாக, சுயாதீன வட்டாரங்கள் உறுதி செய்திருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *