மேலும்

செய்தியாளர்: இந்தியச் செய்தியாளர்

சிறிலங்காவின் முன்னேற்றங்கள் இந்தியாவுக்கு முக்கியமானது – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

சிறிலங்காவின் முன்னேற்றங்கள், இந்தியாவுக்கும், தெற்காசியாவுக்கும், எமது கடற் பிராந்தியத்துக்கும் முக்கியமானது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ரணில் – மோடி சந்திப்பு தொடங்கியது

இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான பேச்சுக்கள் ஆரம்பமாகியுள்ளன.

சிறிலங்கா பிரதமருடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா பேச்சு

இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இன்று காலை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

தலைமன்னார் – இராமேஸ்வரம் பாலத்தை அமைக்க இந்தியா கொள்கை ரீதியாக முடிவு

தலைமன்னாரையும், இராமேஸ்வரத்தையும் இணைக்கும் தரைவழிப்பாலத்தை அமைப்பது தொடர்பாக இந்திய மத்திய அரசாங்கம் கொள்கை ரீதியாக முடிவெடுத்திருப்பதாக, இந்திய மத்திய இணை அமைச்சர் கல்ராஜ்  மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் இன்று முக்கிய பேச்சுக்களில் ஈடுபடுகிறார் ரணில்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூன்று நாள் பயணமாக நேற்று மாலை புதுடெல்லியைச் சென்றடைந்தார். புதுடெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தைச் சென்றடைந்த ரணில் விக்கிரமசிங்கவை, இந்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விரவேற்றார்.

சிறிலங்கா மீதான அனைத்துலக விசாரணையை மோடி அரசு ஏற்காது – முன்னாள் இந்திய இராஜதந்திரி

சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அனைத்துலக விசாரணையை இந்தியாவின் மோடி அரசாங்கம் ஏற்றுக் கொள்வது மிகவும் கடினமானது என்றும், சாத்தியமற்றது என்றும் தெரிவித்துள்ளார், சிறிலங்காவுக்கான முன்னாள் இந்தியத் தூதுவர் நிருபம் சென்.

தலைமன்னார்- இராமேஸ்வரம் தரைவழிப்பாதை திட்டம் குறித்து மோடி முக்கிய கலந்துரையாடல்

சிறிலங்காவின் தலைமன்னாரையும், தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தையும் தரைவழியாக இணைக்கும் பாலத்தை அமைக்கும் திட்டம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதார நிபுணர்கள் மற்றும் துறைசார் வல்லுனர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார்.

வரும் 15ஆம் நாள் புதுடெல்லி செல்கிறார் ரணில்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 15ஆம் நாள் புதுடெல்லிக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்த பிரதமராகியிருந்தால் பெருமளவு கொலைகள் நிகழ்ந்திருக்கும் – சந்திரிகா

அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச பிரதமராக அதிகாரத்துக்கு வந்திருப்பாரேயானால், சிறிலங்காவில் பாரியளவில் அப்பாவிகள் கொலை செய்யப்பட்டிருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க.

சிறிலங்காவுடனான உறவுக்கு இந்தியா முக்கியத்துவம் அளிக்கும்- சந்திரிகாவிடம் மோடி உறுதி

சிறிலங்காவுடனான உறவுக்கு இந்தியா தொடர்ந்தும் முக்கியத்துவம் அளிக்கும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.