மேலும்

ராஜீவ் கொலை கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் மாநிலஅரசுக்கு இல்லை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Newdelhi- courtராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழ்நாடு மாநில அரசுக்கு இல்லை என்று இந்திய உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து தலைமையிலான அரசியலமைப்பு அமர்வு இன்று வெளியிட்டுள்ள தீர்ப்பிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிகளை விடுவிக்கும் அதிகாரம் மத்திய அரசாங்கத்துக்சுகு மட்டுமே உள்ளது என்றும், ஆயுள் தண்டனையைக் குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது என்றும் இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பினால், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரின் விடுதலையும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *