இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய சிறிலங்காவை வலியுறுத்துகிறார் சந்தோஷ் ஜா
இந்தியாவும் சிறிலங்காவும், இருதரப்பு வர்த்தகத்தின் பெரும்பகுதியை இந்திய ரூபாயில் மேற்கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு செய்வது இரு நாடுகளுக்கும் குறிப்பிடத்தக்க நிதி நன்மைகளைக் கொண்டுவரும் என்றும் சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
