மேலும்

நாள்: 16th June 2026

இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய சிறிலங்காவை வலியுறுத்துகிறார் சந்தோஷ் ஜா

இந்தியாவும் சிறிலங்காவும், இருதரப்பு வர்த்தகத்தின் பெரும்பகுதியை இந்திய ரூபாயில் மேற்கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு செய்வது இரு நாடுகளுக்கும் குறிப்பிடத்தக்க நிதி நன்மைகளைக் கொண்டுவரும் என்றும் சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

சித்திரவதைகள் தொடர்பாக பூச்சிய சகிப்புக் கொள்கை- ஐ.நா குழுவிடம் சிறிலங்கா

தற்போதைய அரசாங்கம் சித்திரவதைகள் தொடர்பாக பூச்சிய  சகிப்புக் கொள்கையை கண்டிப்பாக பின்பற்றுவதாக சிறிலங்கா  வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், சித்திரவதை தடுப்புக்கான ஐ.நா உபகுழுவிடம்  தெரிவித்துள்ளார்.

5 படுகொலைகள் தொடர்பான வழக்குகளில் பிள்ளையான் சந்தேக நபராக அறிவிப்பு

2008-ஆம் ஆண்டு மட்டக்களப்பில் ஐந்து பேர்  சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்கள் தொடர்பான வழக்கில், சிறிலங்காவின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையன்)  மூன்றாவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு, மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.