மேலும்

செய்தியாளர்: இந்தியச் செய்தியாளர்

ஐ.நா அறிக்கை குறித்து மூச்சு விடாதாம் இந்தியா – தீர்மான வரைவின் மீதே குறி

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக, இந்தியா கருத்து எதையும் வெளியிடாது என்று கூறப்படுகிறது.

தலைமன்னார்- இராமேஸ்வரம் தரைப்பாலம் குறித்து ரணிலுடன் இந்திய அமைச்சர் பேச்சு

தலைமன்னாரையும் இராமேஸ்வரத்தையும் இணைக்கும் தரைவழிப் பாலத்தை அமைப்பது தொடர்பாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், இந்திய மத்திய தரைவழிப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்கரி பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்களைப் பகிர முயற்சிக்கிறாராம் ரணில்- இந்தியாவிடம் வாக்குறுதி

அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம், ஒற்றையாட்சிக்குள் தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது குறித்து தமது அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிடம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் முன்னேற்றங்கள் இந்தியாவுக்கு முக்கியமானது – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

சிறிலங்காவின் முன்னேற்றங்கள், இந்தியாவுக்கும், தெற்காசியாவுக்கும், எமது கடற் பிராந்தியத்துக்கும் முக்கியமானது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ரணில் – மோடி சந்திப்பு தொடங்கியது

இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான பேச்சுக்கள் ஆரம்பமாகியுள்ளன.

சிறிலங்கா பிரதமருடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா பேச்சு

இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இன்று காலை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

தலைமன்னார் – இராமேஸ்வரம் பாலத்தை அமைக்க இந்தியா கொள்கை ரீதியாக முடிவு

தலைமன்னாரையும், இராமேஸ்வரத்தையும் இணைக்கும் தரைவழிப்பாலத்தை அமைப்பது தொடர்பாக இந்திய மத்திய அரசாங்கம் கொள்கை ரீதியாக முடிவெடுத்திருப்பதாக, இந்திய மத்திய இணை அமைச்சர் கல்ராஜ்  மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் இன்று முக்கிய பேச்சுக்களில் ஈடுபடுகிறார் ரணில்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூன்று நாள் பயணமாக நேற்று மாலை புதுடெல்லியைச் சென்றடைந்தார். புதுடெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தைச் சென்றடைந்த ரணில் விக்கிரமசிங்கவை, இந்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விரவேற்றார்.

சிறிலங்கா மீதான அனைத்துலக விசாரணையை மோடி அரசு ஏற்காது – முன்னாள் இந்திய இராஜதந்திரி

சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அனைத்துலக விசாரணையை இந்தியாவின் மோடி அரசாங்கம் ஏற்றுக் கொள்வது மிகவும் கடினமானது என்றும், சாத்தியமற்றது என்றும் தெரிவித்துள்ளார், சிறிலங்காவுக்கான முன்னாள் இந்தியத் தூதுவர் நிருபம் சென்.

தலைமன்னார்- இராமேஸ்வரம் தரைவழிப்பாதை திட்டம் குறித்து மோடி முக்கிய கலந்துரையாடல்

சிறிலங்காவின் தலைமன்னாரையும், தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தையும் தரைவழியாக இணைக்கும் பாலத்தை அமைக்கும் திட்டம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதார நிபுணர்கள் மற்றும் துறைசார் வல்லுனர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார்.