மேலும்

நாள்: 19th June 2026

சஷீந்திர ராஜபக்சவுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல்

இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச மற்றும்  இருவருக்கு எதிராக,  கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பயங்கரவாதத்தைத் தடுக்க இரண்டு மாதங்களில் புதிய சட்டமூலம்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டு,  தனிநபர்களையோ அல்லது பிற தரப்பினரையோ ஒடுக்குவதற்காக அல்லாமல், பயங்கரவாதத்தைத் தடுக்கும் நோக்கத்திற்காக மட்டுமே ஒரு புதிய சட்டமூலம், இரண்டு மாதங்களில் சமர்ப்பிக்கப்படும் என்று சிறிலங்காவின் நீதி  அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வலி.வடக்கு காணி உரிமையாளர்கள் பலாலியில் இன்றும் போராட்டம்

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது  காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.