சுரேஷ் சாலேயை பரிசோதிக்க 5 மருத்துவர்களைக் கொண்ட குழு நியமனம்
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் சிறிலங்கா அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சாலே, ஏதேனும் துன்புறுத்தலுக்கோ அல்லது சித்திரவதைக்கோ உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பதை ஆய்வு செய்ய மருத்துவர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

