மேலும்

நாள்: 10th June 2026

சுரேஷ் சாலேயை பரிசோதிக்க 5 மருத்துவர்களைக் கொண்ட குழு நியமனம்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் சிறிலங்கா அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர்  சுரேஷ் சாலே,  ஏதேனும் துன்புறுத்தலுக்கோ அல்லது சித்திரவதைக்கோ உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பதை ஆய்வு செய்ய மருத்துவர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கைதில் இருந்து தப்ப நீதிமன்றுக்கு ஓடும் சிறிலங்காவின் முன்னாள் படைத் தளபதிகள்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக, கைது செய்யப்படுவதற்கு தடை விதிக்கக் கோரி சிறிலங்கா இராணுவ மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் இரண்டு பேர்  மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இரண்டு மாதங்களுக்குள் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்

பயங்கரவாத தடைச்சட்டம் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் ரத்துச் செய்யப்பட்டு, புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று சிறிலங்காவின் நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இன்று மட்டும் செம்மணியில் 12 எலும்புக்கூடுகள் அடையாளம்- இதுவரை 339

யாழ்ப்பாணம் – செம்மணி  சித்துப்பாத்தி  மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது, 12 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.