மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

முறைகேடாக கடற்படையில் இணைந்த யோசித ராஜபக்ச – நாடாளுமன்றில் அறிக்கை

சிறிலங்கா அதிபர் செயலகத்தின் அறிவுரையின் பேரில், லெப்.யோசித ராஜபக்ச மீது, சிறிலங்கா கடற்படை நடவடிக்கையை எடுக்கும் என்று சிறிலங்கா அரசின் பிரதம கொரடா கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

ஒற்றையாட்சி முறை நீடித்தால் நாடு பிளவுபடும் – சுமந்திரன்

சிறிலங்காவில் ஒற்றையாட்சி முறை நீடித்தால், நாடு பிளவுபடும் ஆபத்து இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கொழும்பில் நேற்று, எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பெரும் போராட்டத்துக்குப் பின் சிறைக்கு அனுப்பப்பட்ட ஞானசார தேரர் – பிக்குகள் அடாவடித்தனம்

ஹோமகம நீதிமன்றத்தினால் நேற்று முற்பகல் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்ட பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரரை, பெரும் போராட்டத்துக்கு மத்தியில் நேற்றுமாலையே சிறப்பு அதிரடிப்படையினர் சிறைச்சாலைக்கு கொண்டு சென்றனர்.

ஸ்கொட்லாந்தின் அதிகாரப் பகிர்வு குறித்து ஆராய சித்தார்த்தனும் இன்று லண்டன் பயணம்

ஸ்கொட்லாந்தின் சமஷ்டி அதிகாரப் பகிர்வு குறித்து ஆராய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இரா.சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் பிரித்தானியா சென்றுள்ள நிலையில், மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தனும் இன்று லண்டன் செல்லவுள்ளார்.

காணாமற்போனோரின் கதி என்ன? – 12 மாதங்களுக்குள் அறியத் தருவாராம் பரணகம

தமது ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை இன்னும் 12 மாதங்களுக்கு நீடித்தால், காணாமற்போனோர் தொடர்பான 20 ஆயிரம் முறைப்பாடுகளுக்கு நிச்சயம் தீர்வு பெற்றுக் கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார் காணாமல்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வல் பரணகம.

தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டு உயிர் துறப்பாராம் மகிந்த

அமெரிக்க வங்கிகளில் தனது பெயரில் ஒரு டொலரேனும் வைப்பிலிடப்பட்டுள்ளதை நிரூபித்தால், தனது கழுத்தை அறுத்துக் கொண்டு உயிர்துறப்பேன் என்று சவால் விடுத்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.

குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புக்கூறாவிடின் குற்றவாளிகளாக ஓரம்கட்டப்படுவோம் – சிறிலங்கா அதிபர்

போர்க்குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புக்கூறப் பின்னடித்தால், அனைத்துலகம் எம்மை ஒதுக்கி வைத்து விடும் என்பதுடன், குற்றவாளிகளாகவும் முத்திரையை குத்தி விடும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மனித உரிமை, நல்லிணக்கம், பொறுப்புக்கூறலுக்கு தொடர்ந்து உதவுவோம் – என்கிறது அமெரிக்கா

சிறிலங்காவில் மனித உரிமையை பேணவும் நல்லிணக்க, பொறுப்புக்கூறல் செயற்பாடுகளை பலப்படுத்தவும் அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை வழங்கும் என்று அமெரிக்காவின் உதவித் திட்டங்களுக்கான ஆசியப் பிராந்திய உதவி நிர்வாகி ஜொனாதன் ஸ்டிவர்ஸ் தெரிவித்தார்.

ஒற்றையாட்சியை நிராகரித்த சம்பந்தன் – சிங்களத் தலைவர்களின் கருத்து என்ன?

ஒற்றையாட்சிக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அதி உச்ச அதிகாரப் பகிர்வை உள்ளடக்கிய சமஷ்டி முறை மூலமே, தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ள கருத்துக்கு சிங்கள அரசியல் தலைமைகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

எந்தக் காரணம் கொண்டும் வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதியேன் – சிறிலங்கா அதிபர் சூளுரை

போர்க்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள எந்தக் காரணம் கொண்டும் வெளிநாடுகளில் இருந்து நீதிபதிகளை கொண்டு வரமாட்டேன் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.