அமெரிக்க நாடாளுமன்றக் குழு சிறிலங்கா அதிபரைச் சந்திப்பு
அமெரிக்கா நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று நேற்று சிறிலங்காவுக்குப் பணயம் மேற்கொண்டுள்ளது. நாடாளுமன்ற ஜனநாயக ஒத்துழைப்புத் திட்டத்தின் ஒது அங்கமாக இந்தக் குழுவினர் மூன்று நாட்கள் பயணமாக சிறிலங்கா வந்துள்ளனர்.
இவர்கள் இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
அத்துடன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சபாநாயகர் கரு ஜெயசூரிய ஆகியோரையும் சந்திக்கவுள்ளனர்.
இந்தக் குழுவில், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களாக பீற்றர் ரோஸ்கம், டேவிட் பிரைஸ், ஜெரி கொனோலி, அட்ரியன் ஸ்மித் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.