மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

இன்று இந்தோனேசியா செல்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று இந்தோனேசியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தியப் பெருங்கடல் நாடுகள் அமைப்பின், தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்கவே சிறிலங்கா அதிபர் இந்தோனேசியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

அமெரிக்காவுடன் மீண்டும் இரகசிய பாதுகாப்பு உடன்பாட்டுக்கு தயாராகிறது சிறிலங்கா – ஜேவிபி

போர் உதவி வசதிகளுடன் தொடர்புடைய இரகசிய உடன்பாடு ஒன்றை அமெரிக்காவுடன், செய்து கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சிப்பதாக ஜேவிபி குற்றம்சாட்டியுள்ளது.

போர்க்குற்ற விசாரணையில் அக்கறையில்லை – சிறிலங்காவை சாடும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

போருக்குப் பிந்திய நல்லிணக்கம் மற்றும் நீதியை வழங்கும் செயல்முறைகளில் சிறிலங்காவில் மெதுவான முன்னேற்றங்களே ஏற்பட்டுள்ளன என்றும், போர்க்குற்றங்களுக்கு தண்டனை வழக்கும் சிறப்பு நீதிப்பொறிமுறையை உருவாக்குவதில், அக்கறை காண்பிக்கப்படவில்லை என்றும், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் குற்றம்சாட்டியுள்ளார்.

சிறிலங்காவின் புதிய தலைமை நீதியரசராக பதவியேற்றார் பிரியசாத் டெப்

சிறிலங்காவின் புதிய தலைமை நீதியரசராக பிரியசாத் டெப் இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார். சிறிலங்கா அதிபரில் அதிகாரபூர்வ இல்லத்தில் இன்று காலை இந்த நிகழ்வு இடம்பெற்றது.

பிரான்ஸ் செனட் உறுப்பினர்கள் சம்பந்தனை சந்திப்பு

பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்கள் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர். நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

சிறிலங்காவின் புதிய தலைமை நீதியரசர் பிரியசாத் டெப்?

சிறிலங்காவின் புதிய தலைமை நீதியரசராக உயர்நீதிமன்ற நீதியரசர் பிரியசாத் டெப்பை நியமிக்குமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, அரசியலமைப்பு சபை பரிந்துரை செய்துள்ளது.

விரைவில் சிறிலங்கா அமைச்சரவை மாற்றம்

அனைத்துலக நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்ரின் லகாட் அடுத்தமாதம் கொழும்புக்கு மேற்கொள்ளவிருக்கும் பயணத்தைத் தொடர்ந்து, சிறிலங்காவில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதாக உயர்மட்ட அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ், முஸ்லிம் தலைவர்களைச் சந்திக்கிறார் மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச அடுத்த வாரம் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளார்.

படைக்குறைப்பு, காணிகள் விடுவிப்பை உடன் மேற்கொள்ள வேண்டும் – ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்

வடக்கில் படைக்குறைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், சிறிலங்கா படையினர் வசமுள்ள, பொதுமக்களுக்குச் சொந்தமான 6124 ஏக்கர் காணிகள், உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும், சிறுபான்மையினர் தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ரீட்டா ஐசக் நாடியா வலியுறுத்தியுள்ளார்.

சுமந்திரனை துரோகியாக காட்ட முயற்சி – இரா.சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, அதில் சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.