மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

ஒற்றையாட்சிக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளமாட்டோம் – சம்பந்தன்

ஒருபோதும் ஒற்றையாட்சிக் கோட்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்  தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் அரசியல் சித்தாந்தத்தை தோற்கடிப்போம் – மைத்திரி சூளுரை

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் சித்தாந்தத்தைத் தோற்கடிக்கும் நடவடிக்கையிலேயே தமது அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜெனிவா தீர்மானத்தை சிறிலங்கா முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – சம்பந்தன்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதிலிருந்து சிறிலங்கா அரசாங்கம் விலக முடியாது என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

போர்க்குற்ற விசாரணைக்கு நான்கு வித நீதிக்கட்டமைப்புகளை ஆராய்கிறதாம் சிறிலங்கா

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள நான்கு விதமான நீதித்துறைக் கட்டமைப்புகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் மாலைதீவு முன்னாள் அதிபர்

சிறிலங்கா அரசாங்கத்தின் முயற்சியால், பிரித்தானியாவில் மருத்துவ சிகிச்சை பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ள மாலைதீவு முன்னாள் அதிபர் முகமட் நசீட், லண்டன் செல்லும் வழியில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை கொழும்பில் சந்தித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு 13ஆவது திருத்தச்சட்டத்தை தாண்டக் கூடாது – என்கிறார் மகிந்த

புதிய அரசியலமைப்பு எந்தக் காரணத்தைக் கொண்டும் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரப் பகிர்வு முறையைக் கொண்டதாக இருக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.

ஒற்றையாட்சி அரசியலமைப்பே உருவாக்கப்படும் – என்கிறார் ரணில்

நாட்டைப் பிளவுபடுத்தவோ, ஒற்றையாட்சிக்கு முரணான அரசியலமைப்பை உருவாக்கவோ மாட்டோம் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

கருணா குழுவுடனான தொடர்பினாலேயே ரவிராஜ் கொலையை மறைத்ததாக கூறுகிறார் அரசதரப்பு சாட்சி

கருணா குழுவினருடன் தொடர்புகளை வைத்திருந்ததாலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் ந.ரவிராஜ் கொலை தொடர்பான தகவல்களை மறைத்ததாக, அரசதரப்புச் சாட்சியான சிறிலங்கா காவல்துறையில், அதிபர் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய பிரீத்தி விராஜ் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு எந்த சமூகத்துக்கும் முன்னுரிமை வழங்குவதாக அமையக்கூடாது – சுமந்திரன்

புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பு எந்தவொரு சமூகத்துக்கும் சிறப்பு முன்னுரிமை வழங்குவதாக அமையக் கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்  வலியுறுத்தியுள்ளார்.

புதிய அரசியலமைப்பில் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும்- சம்பந்தன் நம்பிக்கை

பிரிக்கப்படாத – ஒன்றுபட்ட இலங்கைக்குள் புதிய அரசியலமைப்பின் மூலம் தேசிய இனப்பிரச்சினைக்கு உறுதியான தீர்வை காண முடியும் என்ற நம்பிக்கை  உள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.