அவுஸ்ரேலியா செல்கிறார் சிறிலங்கா பிரதமர்
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நான்கு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக இன்று அவுஸ்ரேலியாவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார். அவுஸ்ரேலிய பிரதமரின் அழைப்பின் பேரில், சிறிலங்கா பிரதமரின் இந்த அதிகாரபூர்வ பயணம் இடம்பெறவுள்ளது.
அமைச்சர்கள் விஜித் விஜயமுனி சொய்சா, அர்ஜூன ரணதுங்க, பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா உள்ளிட்டோரும் சிறிலங்காப் பிரதமருடன் அவுஸ்ரேலியா செல்லவுள்ளனர்.
இந்தப் பயணத்தின் போது, அவுஸ்ரேலியப் பிரதமர் மற்றும் முக்கிய தலைவர்களுடன் ரணில் விக்கிரமசிங்க இருதரப்புப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
அத்துடன் இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளன.