மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசத்துக்கு சேவை நீடிப்பு

அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசத்துக்கு வரும் செப்ரெம்பர் மாதம் வரையில், சேவை நீடிப்பு அளிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க இதற்கான அனுமதியை அளித்துள்ளார்.

இன்று மகிந்தவைச் சந்திக்கவுள்ள 8 பிரதியமைச்சர்கள்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை, தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் எட்டு பிரதி அமைச்சர்கள் இன்று சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர் என்று கொழும்பு ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய அரசியலமைப்பு குறித்த மக்களின் ஆணை நிறைவேற்றப்படும் – ராஜித சேனாரத்ன

புதிய அரசியலமைப்போ, அரசியலமைப்பு திருத்தமோ நாட்டுக்குத் தேவையில்லை என்று பௌத்த பீடங்களும் சங்க சபாக்களும் இணைந்து தீர்மானம் நிறைவேற்றியிருந்தாலும், அரசியலமைப்பு மாற்றத்துக்கு மக்கள் வழங்கிய ஆணை நிறைவேற்றப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் மெல் குணசேகரவைக் கொலை செய்தவருக்கு மரணதண்டனை

கொழும்பில் மூத்த ஊடகவியலாளர் மெல் குணசேகரவைக் கொலை செய்த 39 வயதுடைய குற்றவாளிக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

அமெரிக்க தூதரகத்துக்கான அச்சுறுத்தல் – விசாரணைக்கு உத்தரவு

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு ஐ.எஸ் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக வெளியான செய்திகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு சிறிலங்கா காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆளுனர் பதவி கிடைக்காததால் ஏமாற்றம் – பதவி விலகுகிறார் கட்டாருக்கான தூதுவர் ஏ.எஸ்.பி.லியனகே

கிழக்கு மாகாண ஆளுனர் பதவியை எதிர்பார்த்திருந்த கட்டாருக்கான சிறிலங்கா தூதுவர் ஏ.எஸ்.பி.லியனகே, அந்தப் பதவி கிடைக்காததையடுத்து, தனது தூதுவர் பதவியை விட்டு விலகவுள்ளார்.

சிறிலங்கா அதிபரின் செயலரானார் ஒஸ்ரின் பெர்னான்டோ

சிறிலங்கா அதிபரின் செயலராக, ஒஸ்ரின் பெர்னான்டோ இன்று பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். சிறிலங்கா அதிபரின் அதிகாரபூர்வ இல்லத்தில் இன்று காலை நடந்த நிகழ்வில்,  அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து ஒஸ்ரின் பெர்னான்டோ நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டார்.

கொழும்பு முச்சக்கரவண்டி சாரதிகள் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

சிறிலங்காவில் அமெரிக்க குடிமக்கள்- குறிப்பாக பெண்கள், முச்சக்கர வண்டிகளில் பயணம் செய்வதை தவிர்க்குமாறு, அமெரிக்க தூதரகம் வெளியிட்டிருந்த எச்சரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பு தேவையில்லை – அஸ்கிரிய பீடம்

தற்போது புதிய அரசியலமைப்பு நாட்டுக்குத் தேவையில்லை என்று அஸ்கிரிய பீடத்தின் காரக்க சங்க சபா தெரிவித்துள்ளது.

கிழக்கு ஆளுனராக ஏ.எஸ்.பி.லியனகே? – அவசரமாக கட்டாரில் இருந்து திருப்பி அழைப்பு

கிழக்கு மாகாண ஆளுனராக வர்த்தகரும், கட்டாருக்கான தூதுவராகப் பணியாற்றுபவருமான ஏ.எஸ்.பி.லியனகே நியமிக்கப்படவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.