அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசத்துக்கு சேவை நீடிப்பு
அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசத்துக்கு வரும் செப்ரெம்பர் மாதம் வரையில், சேவை நீடிப்பு அளிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க இதற்கான அனுமதியை அளித்துள்ளார்.
வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறும் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தைக் கருத்தில் கொண்டே, இந்த சேவை நீடிப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா விவகாரங்களை நியூயோர்க்கில் உள்ள சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியே கையாளுகின்ற போதிலும், ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் உலகத் தலைவர்களுடனான இருதரப்பு சந்திப்புகளில், பிரசாத் காரியவசம் பங்கேற்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டே அவருக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.