அமெரிக்க தூதரகத்துக்கான அச்சுறுத்தல் – விசாரணைக்கு உத்தரவு
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு ஐ.எஸ் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக வெளியான செய்திகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு சிறிலங்கா காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று ஐதேக உறுப்பினர் முஜிபுர் ரகுமான் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சிங்கள, முஸ்லிம் மக்கள் நல்லிணக்கத்துடன் வாழக் கூடிய சூழலை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், அடிப்படைவாதிகள்,மக்களைத் தூண்டி விட்டு, இன நல்லிணக்கத்தை சீர்குலைத்து, நாட்டில் உறுதியற்ற நிலையை உருவாக்க முனைகிறார்கள்.
சில ஊடகங்கள் இனவாதத்தையும், பகைமையையும், மதங்களிடையே வெறுப்புணர்வையும் ஊக்குவித்து வருகின்றன” என்றும் அவர் குறிப்பிட்டார்.