புதிய அரசியலமைப்பு தேவையில்லை – அஸ்கிரிய பீடம்
தற்போது புதிய அரசியலமைப்பு நாட்டுக்குத் தேவையில்லை என்று அஸ்கிரிய பீடத்தின் காரக்க சங்க சபா தெரிவித்துள்ளது.
அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரகாகொட சிறி ஞானரதன தேரர் தலைமையில் நடந்த சங்க சபா கூட்டத்தில் நீண்ட கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கான முன்னுரிமையும் ஒற்றையாட்சித் தன்மையும் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும், அதிபரின் நிறைவேற்று அதிகாரங்கள் ஒழிக்கப்படக் கூடாது என்றும் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தேவைப்பட்டால், அரசியலமைப்புத் திருத்தம் மூலம், தேர்தல் மறுசீரமைப்பை அறிமுகப்படுத்த முடியும் என்றும் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.