ஊடகவியலாளர் மெல் குணசேகரவைக் கொலை செய்தவருக்கு மரணதண்டனை
கொழும்பில் மூத்த ஊடகவியலாளர் மெல் குணசேகரவைக் கொலை செய்த 39 வயதுடைய குற்றவாளிக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
2014ஆம் ஆண்டு, பெப்ரவரி 02ஆம் நாள், பத்தரமுல்லவில் உள்ள வீட்டில் வைத்து. ஊடகவியலாளர் மெல் குணசேகர கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலையை, வீட்டில் திருத்த வேலைகளில் ஈடுபட்டிருந்த நபரே மேற்கொண்டார் என்பது விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொலை செய்த பின்னர் மெல் குணசேகரவின் உடமைகளை கொள்ளையிட்ட குற்றத்துக்காக 30 ஆண்டு சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.