சிறிலங்கா அதிபரின் செயலரானார் ஒஸ்ரின் பெர்னான்டோ
சிறிலங்கா அதிபரின் செயலராக, ஒஸ்ரின் பெர்னான்டோ இன்று பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். சிறிலங்கா அதிபரின் அதிகாரபூர்வ இல்லத்தில் இன்று காலை நடந்த நிகழ்வில், அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து ஒஸ்ரின் பெர்னான்டோ நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டார்.
இதன்போது, சிறிலங்கா அதிபரின் முன்னாள் செயலர் பி.பி.அபயகோன், ஒஸ்ரின் பெர்னான்டோவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதையடுத்து மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன், சிறிலங்கா அதிபரின் புதிய செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோ, அதிபர் செயலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.