மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர் மைத்திரி பக்கம் சாயத் தயார்

மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிர்க்கட்சியில் இடம்பெற்றுள்ள சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பக்கத்துக்கு மாற இருப்பதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தலையணைச் சண்டை – மோதிக்கொண்ட உறுப்பினர்கள்

சிறிலங்காவில் எதிர்வரும் வியாழக்கிழமை கொண்டப்படவுள்ள சிங்கள- தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, நாடாளுமன்ற மைதானத்தில் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.

துறைமுக நகரத் திட்டத்தினால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படாது- சிறிலங்கா பிரதமர்

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம், சிறிலங்காவினதோ அல்லது அயல்நாடுகளினதோ பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானதாக அமையாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினையைத் தீர்க்காவிடின், மீண்டும் ஆயுதக் கிளர்ச்சி ஏற்படும் – சிறிலங்கா அதிபர் எச்சரிக்கை

இனப்பிரச்சினைக்கு இப்போது தீர்வு காணப்படாவிட்டால்,  மீண்டும் நாட்டை பிரிக்க தனிஈழம் கேட்கும், ஆயுதக் கிளர்ச்சிகள் தலைதூக்கும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

ரணில் நாடு திரும்பியதும் அனைத்துலக நாணய நிதியத்தின் கடன் குறித்து இறுதி முடிவு

அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து கடன்களைப் பெறுவது பேச்சுக்களில், சிறிலங்கா பிரதமர் சீனாவில் இருந்து நாடு திரும்பியதும், இறுதி முடிவு எடுக்கப்படும் என்று சிறிலங்கா நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரியில் மீட்கப்பட்ட வெடிமருத்து வெடிக்கக் கூடியதல்ல- காவல்துறைப் பேச்சாளர்

சாவகச்சேரியில் மீட்கப்பட்ட வெடிபொருட்களில் உள்ளடங்கியிருந்த சி-4 பிளாஸ்டிக் வெடிமருந்து, மிகவும் பழைமையானது என்றும், அது வெடிக்கும் திறனை இழந்து விட்டதாகவும், சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு இராஜாங்க அமைச்சர், இரு பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் புதிதாக இரண்டு பிரதி அமைச்சர்களும், ஒரு இராஜாங்க அமைச்சரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடந்த நிகழ்வில் இவர்கள் பதவியேற்றனர்.

அரசியலமைப்பு பேரவைக்கு செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட 7 உபதலைவர்கள் தெரிவு

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக, சிறிலங்கா நாடாளுமன்றம் அரசியலமைப்பு பேரவையாக மாற்றப்பட்ட பின்னர், இன்று பிற்பகல் முதல் முறையாக கூடியது. இதன் போது, அரசியலமைப்புப் பேரவைக்கான  ஏழு உப தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.

சாவகச்சேரி வெடிபொருள் சந்தேகநபரிடம் வவுனியாவில் வைத்தே விசாரணை

சாவகச்சேரியில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ரமேஸ் எனப்படும், எட்வேட் ஜூலியன், இன்னமும் கொழும்புக்குக் கொண்டு வரப்படவில்லை என்றும், வவுனியாவில் வைத்தே விசாரிக்கப்படுவதாகவும், நீதிமன்றத்துக்கு சிறிலங்கா காவல்துறையினரால் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

துறைமுக நகரத் திட்டத்துக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

சீனாவின் 1.4 பில்லியன் டொலர் முதலீட்டில், அமைக்கப்படவுள்ள துறைமுக நகரத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.