மோடியைச் சந்தித்தார் ரணில்
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
ஹைதராபாத் ஹவுசில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்துப் பேச்சுக்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, இன்று காலை புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைத்த 5 ஆவது உலக இணையவெளி கருத்தரங்கிலும் சிறிலங்கா பிரதமர் கலந்து கொண்டார்.