மேலும்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் விவகாரம் – நாளை கட்சித் தலைவர்கள் கூட்டம்

karu-jayasuriyaஉள்ளூராட்சித் தேர்தலைப் பிற்போடும் சூழல் எழுந்துள்ளமை குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.

உள்ளூராட்சி சபைகளின் எல்லைகள் குறித்த வர்த்தமானி அறிவிப்புக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை அடுத்தே இந்தக் கூட்டத்துக்கு சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலை நடத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினேஸ் குணவர்த்தன மற்றும் ஐதேக உறுப்பினர் ஹேசன் விதானகே ஆகியோர் வலியுறுத்தினர்.

அதற்கு அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, நீதிமன்ற உத்தரவை மீறவோ,  மாற்றவோ முடியாது என்று கூறினார்.

இதன்போது சபாநாயகர் கரு ஜெயசூரிய, தேர்தலை தன்னால் நடத்த முடியாது என்றும், நாளை இந்த விவகாரம் குறித்து விவாதிக்க முடியும் என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *