இடைக்கால அறிக்கை குறித்து இணையவழி கருத்துக்கணிப்பு நடத்த முடிவு
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நாடாளுமன்ற வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக, பொதுமக்களின் கருத்துக்களை இணைய வழியில் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இதற்காக முகநூல் மற்றும் சில இணையத்தளங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் செயலக வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இணையத்தளம் மூலமும், முகநூல் பதிவுகள் மூலமும், பொதுமக்களின் கருத்துக்கள் கோரப்படவுள்ளன.
ஆசிய பசுபிக் பிராந்தியத்தல், இவ்வாறானதொரு நடவடிக்கையை மேற்கொள்ளும் முதல் நாடாக சிறிலங்கா விளங்கும் என்றும், பிரதமர் செயலக வட்டாரங்கள் கூறியுள்ளன.
இதனை இணையவழி கருத்துக்கணிப்பு என்று அழைக்கும் அதிகாரிகள், வரும் புதன்கிழமை இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நிறைவடைந்த பின்னர், இந்தக் கருத்துக்களைத் திரட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.