மேலும்

மாதம்: August 2026

நீதியரசர்களின் ஓய்வு வயதை நீடிப்பதற்கு மகாநாயக்கர்கள் எதிர்ப்பு

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் வகையிலான அரசியலமைப்புத் திருத்தம் பொருத்தமற்றது என்று, சிறிலங்கா அதிபருக்கு மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களும்,  கடிதம் எழுதியுள்ளனர்.

யோஷித ராஜபக்ச, வசந்த கரன்னகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் சிறிலங்கா கடற்படைத் தளபதி அட்மிரல் ஒவ் த பிளீட் வசந்த கரன்னகொட ஆகியோருக்கு எதிராக, கொழும்பு மேல்நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஆறு தமிழ்ப் பேசும் கட்சிகள் சிறிலங்கா அதிபருடன் சந்திப்பு

ஆறு தமிழ்ப் பேசும் கட்சிகளின்  பிரதிநிதிகள், சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.

கோட்டாவின் ரிட் மனு தொடர்பாக செப்ரெம்பர் 22இல் தீர்ப்பு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பாக, தாம் கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி,  முன்னாள் சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பு செப்ரெம்பர் 22 ஆம் நாள் அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

காணிகளை விடுவிக்கக் கோரி வசாவிளான் மக்களும் போராட்டத்தில் குதித்தனர்

சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, வசாவிளான் மக்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

சிறிலங்கா- அமெரிக்க கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி நிறைவு

சிறிலங்கா கடற்படைக்கும் அமெரிக்க கடற்படைக்கும் இடையிலான, CARAT 2026 கூட்டுப் பயிற்சி திருகோணமலையில் நிறைவடைந்துள்ளது.

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி- இறுதிக்கட்டத்தில் இந்தியாவுடனான பேச்சுக்கள்

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பான, இந்திய அரசாங்கத்துடனான பேச்சுக்கள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாக, சிறிலங்காவின் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை 6 ஆண்டுகளாக வரையறுக்கத் திட்டம்

சிறிலங்கா அரசாங்கம், பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை அதிகபட்சமாக ஆறு ஆண்டுகள் வரையறுக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மஹர சிறையில் கலவரம் கட்டுக்குள் வரவில்லை- ஊரடங்கு உத்தரவு

மஹர சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட வன்முறைகள் நேற்றிரவுவரை கட்டுப்பாட்டிற்குள் வராத நிலையில், நேற்று இரவு ராகம காவல் நிலையப் பகுதியில் காவல்துறை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்தது.

மரணதண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்யும் ஹேமசிறி, பூஜித்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை தடுக்கத் தவறியதற்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட சிறிலங்காவின்  இரண்டு உயர்மட்ட முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகளும், தங்கள் தண்டனைத் தீர்ப்புகளுக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக அவர்களின் சட்டவாளர் தெரிவித்துள்ளார்.