மேலும்

நாள்: 16th August 2026

ராஜ்நாத் சிங்கின் பயணம்- பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் கவனம்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் சிறிலங்கா பயணத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவுக்கு தப்பிக்கும் குற்றவாளிகள்- பாக்கு நீரிணையில் பாதுகாப்பு அதிகரிப்பு.

தேடப்படும் குற்றவாளிகள் மன்னார் கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதாக கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து, வடக்கில் பாக்கு நீரிணைப் பகுதியில், கண்காணிப்பு நடவடிக்கைகள்  தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

குமாரபுரம் படுகொலை வழக்கை மீள் விசாரணை செய்ய மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

திருகோணமலை- குமாரபுரத்தில் 1996-ஆம் ஆண்டு 24 தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட  வழக்கில், அனுராதபுரம் மேல்நீதிமன்றத்தால்  ஆறு சிறிலங்கா இராணுவத்தினர் விடுவிக்கப்பட்டது குறித்து மீள் விசாரணை நடத்த மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐ.நா சிறப்பு அறிக்கையாளருக்கு வெளிவிவகார அமைச்சு பதிலளிக்கும்

22வது அரசியலமைப்பு திருத்த வரைவு தொடர்பாக, நீதிபதிகள் மற்றும் சட்ட வல்லுநர்களின் சுதந்திரம் குறித்த, ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் மார்கரெட் சட்டர்வைட் எழுப்பிய கவலைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் பதிலளிக்கும் என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்  தெரிவித்தார்.

கொழும்பு அருகே கடலில் மூழ்கிய சிறிலங்கா கடற்படையின் டோறா படகு

மொரட்டுவவில் உள்ள அகுலான கடற்கரையிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் சிறிலங்கா கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகு ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.