22வது திருத்தச் சட்டமூலம் குறித்து பொதுவாக்கெடுப்பு கோருகிறது தமிழ் அரசுக் கட்சி
சிறிலங்கா அரசாங்கம் நாடாளுமன்றில் முன்வைத்துள்ள, அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம் மக்கள் இறைமையுடன் தொடர்புபட்ட விடயம் என்பதால், அதனை பொதுவாக்கெடுப்புக்கு உட்படுத்த வேண்டும் என, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது.


