காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து அனைத்துலக விசாரணை கோரி போராட்டம்
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு அனைத்துலக நீதி கோரி, யாழ்ப்பாணம் செம்மணியில் நேற்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு அனைத்துலக நீதி கோரி, யாழ்ப்பாணம் செம்மணியில் நேற்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செம்மணி, மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை விரைவாக முன்னெடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவது அரசாங்கத்தின் கடமையாகும் என சிறிலங்காவின் நீதி அமைச்சர், ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி, மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று மேலும் 03 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 07 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதற்காக, சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை, திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை, மாத்தறை பிரதம நீதிவான் சதுரங்க எரங்க திசநாயக்க, நிராகரித்துள்ளார்.
இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச மற்றும் இருவருக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டு, தனிநபர்களையோ அல்லது பிற தரப்பினரையோ ஒடுக்குவதற்காக அல்லாமல், பயங்கரவாதத்தைத் தடுக்கும் நோக்கத்திற்காக மட்டுமே ஒரு புதிய சட்டமூலம், இரண்டு மாதங்களில் சமர்ப்பிக்கப்படும் என்று சிறிலங்காவின் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
சிறிலங்கா இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள தடுப்புக்காவல் மையங்களில் இடம்பெறும் திட்டமிட்ட சித்திரவதை, நிறுவனமயப்படுத்தப்பட்ட புறக்கணிப்புகள் குறித்து, சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா உபகுழுவிடம் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு, அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வரான யோஷித ராஜபக்ச, இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு சுரேஷ் சாலே தன்னிடம் உள்ள அனைத்து தொடர்புடைய தகவல்களையும் வெளிப்படுத்தி முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ, தெரிவித்துள்ளார்.