மேலும்

மாதம்: June 2026

கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டா ரிட் மனுத் தாக்கல்

ஈஸ்டர் ஞாயிறு  தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக, குற்றப் புலனாய்வுப்பிரிவு தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய சிறிலங்காவை வலியுறுத்துகிறார் சந்தோஷ் ஜா

இந்தியாவும் சிறிலங்காவும், இருதரப்பு வர்த்தகத்தின் பெரும்பகுதியை இந்திய ரூபாயில் மேற்கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு செய்வது இரு நாடுகளுக்கும் குறிப்பிடத்தக்க நிதி நன்மைகளைக் கொண்டுவரும் என்றும் சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

சித்திரவதைகள் தொடர்பாக பூச்சிய சகிப்புக் கொள்கை- ஐ.நா குழுவிடம் சிறிலங்கா

தற்போதைய அரசாங்கம் சித்திரவதைகள் தொடர்பாக பூச்சிய  சகிப்புக் கொள்கையை கண்டிப்பாக பின்பற்றுவதாக சிறிலங்கா  வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், சித்திரவதை தடுப்புக்கான ஐ.நா உபகுழுவிடம்  தெரிவித்துள்ளார்.

5 படுகொலைகள் தொடர்பான வழக்குகளில் பிள்ளையான் சந்தேக நபராக அறிவிப்பு

2008-ஆம் ஆண்டு மட்டக்களப்பில் ஐந்து பேர்  சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்கள் தொடர்பான வழக்கில், சிறிலங்காவின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையன்)  மூன்றாவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு, மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

செம்மணிப் புதைகுழியில் இன்றும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

வலி.வடக்கு மக்கள் யாழ்ப்பாணத்திலும் பலாலியிலும் போராட்டம்

வலி.வடக்குப் பிரதேச மக்கள் தம்மை மீள்குடியேற்றுமாறு கோரி  யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு முன்பாகவும் பலாலி சந்திக்கு அருகிலும்  இன்று போராட்டங்களை முன்னெடுத்தனர்.

அனுர அரசு பெற்றுள்ள 1.85 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடன்கள்

தற்போதைய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், சிறிலங்கா 1.85 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றுள்ளதாக  நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய மருந்துகளுக்கு அனுமதி இழுத்தடிப்பு – சிறிலங்காவில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருந்துப் பொருட்களின் இறக்குமதி அனுமதிகளை வழங்குவதில், சிறிலங்கா அதிகாரிகள் காட்டும் அளவுக்கதிகமான தாமதம் குறித்து, இந்தியா கடும் கவலை தெரிவித்துள்ளது.

செம்மணிப் புதைகுழியில் இதுவரை 355 எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப்புதைகுழியில் இருந்து நேற்று 7 மனித எலும்புக்கூடுகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.

சிறிலங்காவின் பொருளாதாரம் விரைவில் முழுமையாக வீழ்ச்சியடையும்

சிறிலங்காவின் பொருளாதாரம் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளதாகவும், வெகுவிரைவில் ஒரு முழுமையான வீழ்ச்சியைக் காண முடியும் என்றும், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.