மேலும்

மாதம்: July 2025

அநீதிக்கு உள்ளானதாலேயே ஷானி சிஐடி பணிப்பாளராக நியமனம்

முன்னைய அரசாங்கங்களின் காலத்தில், மோசமான அநீதிக்கு உள்ளானதால், மூத்த காவல்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகர மீண்டும், குற்றப் புலனாய்வுத் துறை (CID) பணிப்பாளராக நியமிக்கப்பட்டதாக சிறிலங்கா பொதுப் பாதுகாப்பு அமைச்சர்  ஆனந்த விஜேபால, தெரிவித்துள்ளார்.

கிழக்கு பாதுகாப்பு நிலவரங்கள்- சிறிலங்கா இராணுவத் தளபதி ஆராய்வு

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் லசந்த றொட்றிகோ கிழக்கில் படையினரின் படைத் தலைமையகங்களில் ஆய்வு செய்துள்ளார்.

சிறிலங்காவின் உயர் படைத்தளபதிகளுடன் பாகிஸ்தான் இராணுவத் தளபதி சந்திப்பு

பாகிஸ்தான் இராணுவத்தின் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சையத்  ஆமிர் ரசா (Syed Aamer Raza) சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

தேசபந்து தென்னக்கோன் குற்றவாளி – பதவியில் இருந்து நீக்கவும் பரிந்துரை

பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள சிறிலங்கா காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்திலும் அவர் குற்றவாளியாக காணப்பட்டுள்ளார் என நாடாளுமன்ற விசாரணைக்குழு கண்டறிந்துள்ளது.

செம்மணியில் மேலும் 8 எலும்புக்கூட்டுத் தொகுதிகள்

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து மேலும் 8 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி புதைகுழிக்கு சர்வதேச விசாரணை- அவுஸ்ரேலியாவில் பேரணி

யாழ்ப்பாணத்தின் புறநகர்ப் பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதைகுழித் தளத்திற்கு, ஜூன் 25 ஆம் திகதி  ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்  வோல்கர் டர்க் பயணம்  மேற்கொண்ட நிலையில்,  ஜூலை 21 ஆம் திகதி அவுஸ்ரேலியா முழுவதிலுமிருந்து வந்த தமிழர்கள் கன்பராவில் பேரணி நடத்தினர்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்கா இணைய வேண்டும்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை (ஐசிசி) உருவாக்கிய  ரோம் சட்டத்தில் சிறிலங்கா கையெழுத்திட வேண்டும் என்று,  சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

ஒரேகுற்றம் இரண்டு வழக்குகள்- சிக்கிய முன்னாள் இராணுவ அதிகாரி

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அரசாங்க நிதியைத் தவறாகப் பயன்படுத்தி விளையாட்டு உபகரணங்கள் வாங்கப்பட்ட குற்றச்சாட்டில்,  சிறிலங்காவின் இரண்டு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் இராணுவத் தலைமை அதிகாரிக்கு எதிராக குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நிலந்த ஜயவர்த்தனவை நீக்கியது தவறு – தயாசிறி போர்க்கொடி

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர், நிலந்த ஜயவர்த்தனவை, சிறிலங்கா காவல்துறை சேவையில் இருந்து நீக்கும் முடிவு நியாயமற்றது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்கத் தயார் – சிறிலங்கா அரசு அறிவிப்பு

பரஸ்பர வரிகளைக் குறைப்பதற்காக,  அமெரிக்காவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது குறித்து சிறிலங்கா  பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ  தெரிவித்துள்ளார்.