வாக்களிப்பதற்காக விசேட ஜெட் விமானத்தில் நாடு திரும்பினார் அனுர
சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க சிறப்பு ஜெட் விமானத்தில் வியட்நாமில் இருந்து நாடு திரும்பியுள்ளார்.
வியட்நாமுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அவர், இன்று காலை அங்கு நடந்த வெசாக் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.
இதையடுத்து அவர், Embraer Legacy 600 வணிக ஜெட் விமானம் மூலம் இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கினார்.
உடனடியாக விமான நிலையத்தில் இருந்து கொழும்பு 10 இல் உள்ள வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று அவர் உள்ளூராட்சித் தேர்தலில் தனது வாக்கைப் பதிவு செய்துள்ளார்.
வாக்களித்த பின்னர் ஊடகங்களிடம் பேசிய போது தனது பயணம் வியட்நாம் அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறினார்.