மேலும்

உள்ளூராட்சித் தேர்தல் – வாக்களிப்பு ஆரம்பமாகியது

சிறிலங்காவில்  339 உள்ளூராட்சி சபைளுக்கான தேர்தலின்  வாக்களிப்பு இன்று காலை ஆரம்பமாகியுள்ளது. 

யாழ்ப்பாணம், கொழும்பு, கண்டி, வவுனியா, மட்டக்களப்பு, உள்ளிட்ட 28 மாநகர சபைகள், 36 நகர சபைகள், 275 பிரதேச சபைகள் என, மொத்தம் 339 உள்ளூராட்சி சபைகளுக்கு,  இன்று தேர்தல் நடைபெறுகிறது.

மொத்தம், 4,877 வட்டாரங்களில் நடக்கின்ற  இந்த தேர்தலில்- 8,287 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இந்த தேர்தலில் 49 அரசியல் கட்சிகள் மற்றும் 257 சுயேட்சைக் குழுக்களின் சார்பில்,   75,589 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

13,759  வாக்களிப்பு நிலையங்களில்இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்களிப்பு மாலை 4 மணியளவில் நிறைவடையும்.

அதையடுத்து அந்தந்த வாக்குச்சாவடிகளிலேயே வாக்குகள் எண்ணப்படும்.

இன்று காலை 517 வாக்களிப்பு நிலையங்களிலும் காலை 7 மணிக்கு வாக்களிப்பு  ஆரம்பமாகி சுமுகமான முறையில் இடம்பெற்று வருவதாக யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *