மேலும்

ஆயிரம் ரூபாவுக்காக பாகிஸ்தான் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்

ஆயிரம் ரூபாவுக்காக, பாகிஸ்தான் தூதரகத்துக்கு முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

காஷ்மீரில் பஹல்காமில், இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக, கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு வெளியே இரண்டு நாட்கள் கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டது.

எமது தலைமுறை கட்சி எனத் தங்களை அழைத்துக் கொள்ளும் ஒரு குழுவினர், இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

பாகிஸ்தானை, பயங்கரவாதத்தை ஆதரிக்க வேண்டாம் என்று அவர்களில் பலர், கோசங்களை எழுப்பியிருந்தனர்.

போராட்டத்தின் முடிவில், அதில் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும், ஆயிரம் ரூபா தாள் வழங்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் செய்தி சேகரித்த ஊடகவியலாளர்கள் இதனை அவதானித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *