உள்ளூராட்சித் தேர்தலுக்கு ஏற்பாடுகள் தயார்
சிறிலங்காவில் உள்ளூராட்சித் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. தேர்தல் பிரசாரங்கள் நேற்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்றும் நாளையும் அமைதிக்காலம் என்பதால், எந்தவொரு தேர்தல் பிரசார நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் அவர் அறிவித்துள்ளார்.
சிறிலங்காவில் 28 மாநகர சபைகள், 36 நகரசபைகள், 275 பிரதேச சபைகளை உள்ளடக்கியதாக, மொத்தம் 339 உள்ளூராட்சி சபைகளுக்கு, மே 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தேர்தல் நடைபெறவுள்ளது.
4,877 வட்டாரங்களில் நடக்கவுள்ள இந்த தேர்தலில் 70,0000 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
13,759 வாக்களிப்பு நிலையங்களில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணி தொடக்கம், மாலை 4 மணி வரை வாக்களிப்பு இடம்பெறும்.
அதன்பின்னர், வாக்குச்சாவடிகளிலேயே வாக்குகள் எண்ணப்பட்டு வட்டார முடிகள் அறிவிக்கப்படும்.
மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் மூலம், உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என்றும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.