மேலும்

சிறிலங்கா அதிபர் தேர்தல் – போட்டியில் இருந்து ஒதுங்கினார் தில்ருக்ஷி

சிறிலங்காவில் வரும் நொவம்பர் மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் சொலிசிற்றர் ஜெனரல் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க போட்டியிடமாட்டார் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவராக இருந்த தில்ருக்ஷி தற்போது, சட்டமா அதிபர் திணைக்களத்தில் சொலிசிற்றர் ஜெனரலாக பணியாற்றி வருகிறார்.

இவர், சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, தனது பதவியை விட்டு விலகும் கடிதத்தை கையளித்ததார் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஐதேக தலைமைத்துவத்தினால் கொடுக்கப்பட்ட அழுத்தங்களை அடுத்து, அவர், தனது பதவி விலகல் கடிதத்தை மீளப் பெற்றுள்ளார் என, சட்டமா அதிபர் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

சட்டமா அதிபரிடம் கொடுக்கப்பட்ட பதவி விலகல் கடிதம், பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பப்படுவதற்கு முன்னரே மீளப் பெறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *