சிறிலங்காவின் முதல் ‘செல்பி’
சிறிலங்காவைச் சேர்ந்த இரண்டு ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய செய்மதியான ராவணா, விண்வெளியில் இருந்து எடுத்த முதலாவது படம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
சிறிலங்காவினால் முதல்முறையாக தயாரிக்கப்பட்ட ராவணா செய்மதி, ஜப்பானிய நிறுவனம் ஒன்றினால் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
இந்த செய்மதி தற்போது படங்களை அனுப்பத் தொடங்கியுள்ளது. இலங்கைத் தீவையும் அதனைச் சுற்றிய கடற்பகுதிகளையும் முதலில் படம் பிடித்துள்ளது ராவணா.
சிறிலங்கா தனது செய்மதி மூலம் இலங்கைத் தீவை படம்பிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.