மேலும்

மாதம்: June 2019

கண்டியில் இன்று வணிக நிலையங்களை மூடி தேரரின் போராட்டத்துக்கு ஆதரவு

தலதா மாளிகைக்கு முன்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் நடத்தி வருகின்ற உண்ணாவிரதப் போராட்டம், இன்று நான்காவது நாளை எட்டியுள்ள நிலையில், கண்டி நகரில் இன்று வணிக நிலையங்களை அடைத்துப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

ரணிலைச் சந்திக்கிறார் மகிந்த – இன்று நடக்கிறது இரகசியப் பேச்சு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவும், இன்று சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளனர் என்று அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

அசாத் சாலியை நீக்கி விட்டு பீலிக்ஸ் பெரேராவை மேல் மாகாண ஆளுநராக நியமிக்க திட்டம்

மேல் மாகாண ஆளுநராக உள்ள அசாத் சாலிக்குப் பதிலாக, முன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேராவை நியமிக்கும் யோசனை ஒன்று சிறிலங்கா அதிபருக்கு முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள். தெரிவிக்கின்றன.

சிறிலங்காவுடன் உறவுகளைப் பலப்படுத்த ஆதரவு – இந்திய வெளிவிவகார அமைச்சர்

சிறிலங்காவுடனான உறவுகளை பலப்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பேன் என்று இந்தியாவின் புதிய வெளிவிவகார அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, சுப்ரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுப் படைகள் முகாமிட இடமளியேன் – சிறிலங்கா அதிபர்

சிறிலங்காவுக்குள் வெளிநாட்டுப் படையினர் தளம் அமைப்பதற்கு இடமளிக்க மாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

இரண்டு மாதங்களுக்குள் பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம் இரண்டு மாதங்களுக்கிடையில் ஆரம்பிக்கப்படும் என்று விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின்  உதவித் தலைவர் பிரியந்த காரியப்பெரும தெரிவித்தார்.

மோடியுடன் தனியாகவும் பேசினார் மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் இந்தியப் பயணம் மூன்று காரணங்களுக்காக, வெற்றிகரமானதாக இருந்தது என்று புதுடெல்லிக்கான சிறிலங்கா தூதுவர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

தேரரின் உண்ணாவிரதத்தை கண்டுகொள்ளாத மைத்திரி

அமைச்சர் றிசாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்கம் செய்யக் கோரி, அத்துரலியே ரத்தன தேரர் தலதா மாளிகைக்கு முன்பாக நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தலையீடு செய்யும் எண்ணம் சிறிலங்கா அதிபருக்கு இல்லை என்று அதிபர் செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பதவி விலகமாட்டேன் – அடம் பிடிக்கும் அசாத் சாலி

எத்தகைய போராட்டங்கள், அழுத்தங்களுக்கும் அடிபணிந்து, பதவி விலகப் போவதில்லை என்று மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

ரத்தன தேரின் உடல்நிலை சீராக உள்ளது – எஸ்.பி மட்டும் பார்வையிட்டார்

கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக, நேற்று இரண்டாவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அத்துரலியே ரத்தன தேரரின், உடல் நிலை நன்றாகவே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.