வெளிநாட்டுப் படைகள் முகாமிட இடமளியேன் – சிறிலங்கா அதிபர்
சிறிலங்காவுக்குள் வெளிநாட்டுப் படையினர் தளம் அமைப்பதற்கு இடமளிக்க மாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவவில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்,
“நாட்டுக்குள் வெளிநாட்டுப் படைகளைக் கொண்டு வரக் கூடாது என்று மகாநாயக்கர்களும், கத்தோலிக்க திருச்சபை பேராயரும் கோரியிருப்பதாக நாளிதழ்களில் பார்த்தேன்.
வெளிநாட்டுப் படைகளை இங்கு கொண்டு வருவதற்கான எந்த உடன்பாட்டையும் சிறிலங்கா அரசாங்கம் செய்து கொள்ளவில்லை.
நான் பதவியில் இருக்கும் வரை வெளிநாட்டுப் படையினர் சிறிலங்காவுக்குள் நுழைவதற்கோ, தளம் அமைத்து தங்குவதற்கோ இடமளிக்கமாட்டேன்.” என்றும் அவர் தெரிவித்தார்.