மேலும்

மாதம்: June 2019

முஸ்லிம் அமைச்சர்களின் வெற்றிடங்கள் நிரப்புவதில்லை – ரணில் முடிவு

பதவியில் இருந்து விலகிய முஸ்லிம் அமைச்சர்களின் வெற்றிடைங்களை நிரப்புவதில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க முடிவு செய்துள்ளார் என்று அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

புலனாய்வு அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து – மகிந்த

நாடாளுமன்றத் தெரிவுக்குழு விசாரணைகளில் அளிக்கப்படும் சாட்சியங்களினால், புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.

நம்பிக்கையில்லா பிரேரணை – ஜூலை 9, 10 இல் விவாதம்

சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக ஜேவிபியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை, ஜூலை 9ஆம், 10ஆம் நாள்களில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிறிலங்காவுடனான பேச்சுக்களில் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், அரசியல் இராணுவ விவகாரங்களுக்கான உதவிச் செயலர் கிளார்க் கூப்பர், நேற்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலர் ஆகியோரைச் சந்தித்து தனித்தனியாகப் பேச்சு நடத்தினார்.

கூடுதல் அதிகாரங்களுடன் அஜித் டோவலுக்கு மீண்டும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், கூடுதல் அதிகாரங்களுடன், மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு, பணி நீடிப்புச் செய்யப்பட்டுள்ளார்.

சிறிலங்கா தலைவர்களுடன் இன்று முக்கிய பேச்சுக்களில் ஈடுபடுகிறார் அவுஸ்ரேலிய அமைச்சர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலியாவின் உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டன், இன்று சிறிலங்காவின் உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

நீதிமன்ற கட்டளைப்படி நாடு திரும்பவில்லை கோத்தா – சிங்கப்பூரில் சிகிச்சை

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பவில்லை.

உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார் அத்துரலியே ரத்தன தேரர்

நான்கு நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் நேற்று மாலை உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

முஸ்லிம் அமைச்சர்கள் கூண்டோடு பதவி விலகல்

சிறிலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகித்து வந்த அனைத்து முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களும் பதவிகளை விட்டு விலகியுள்ளனர்.

அசாத் சாலி, ஹிஸ்புல்லா பதவி விலகினர்

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரரின் உண்ணாவிரதப் போராட்டம், மற்றும் அவருக்கு ஆதரவாக தீவிரமடைந்து வந்த போராட்டங்களை அடுத்து, மேல் மாகாண ஆளுநர், அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோர் பதவிகளை விட்டு விலகியுள்ளனர்.