மேலும்

மாதம்: February 2019

சிறிலங்காவிடம் உண்மையான வெளிப்படையான உறவை எதிர்பார்க்கும் அமெரிக்கா

சிறிலங்கா அனைத்து நாடுகளுடனும் உறவுகளைப் பலப்படுத்திக் கொண்டாலும் அது வெளிப்படைத்தன்மையுள்ளதாக இருக்க வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பதில் முதன்மை பிரதி உதவிச் செயலர் தோமஸ் வஜ்டா தெரிவித்தார்.

இந்த ஆண்டில் புதிய அரசாங்கம் – சிறிலங்கா அதிபர்

ஐக்கிய தேசியக் கட்சிக்கு அந்தக் கட்சியின் தலைவர், தலைமை தாங்கவில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பலாலியில் இருந்து அவுஸ்ரேலியா, ஐரோப்பா வரை விமான சேவை

பலாலி விமான நிலையத்தை 20 பில்லியன் ரூபா செலவில் அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், இதன் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

போர்க்குற்றத்தை ஒப்புக் கொண்டு காட்டிக் கொடுத்து விட்டார் ரணில் – மகிந்த குற்றச்சாட்டு

பயங்கரவாதத்தை ஒழிப்பது அடிப்படையில் ஒரு போர்க்குற்றம் அல்ல என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபரும் எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

18 ஆவது திருத்தத்தை மீளக் கொண்டு வரும் முயற்சி – சிவில் சமூக அமைப்புகள் எதிர்ப்பு

அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச்சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தும், சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவின் திட்டத்துக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒத்துழைத்து வருகிறார் என்று சிவில் சமூக அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.

மற்றொரு கடற்படைப் புலனாய்வு அதிகாரியைக் கைது செய்யும் முயற்சியில் சிஐடி

சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவின் நெருங்கிய உதவியாளராக இருந்த கடற்படை அதிகாரி ஒருவரை, கைது செய்யும் முயற்சியில் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இறங்கியுள்ளனர்.

கடல்சார் பாதுகாப்புக்காக சிறிலங்காவுக்கு நவீன கப்பலை வழங்குகிறது ஜப்பான்

சிறிலங்காவின் கடலோர மற்றும் கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு, ஆதரவளிக்க முன்வந்துள்ள ஜப்பான், இதற்காக கப்பல் ஒன்றையும் வழங்கப் போவதாக அறிவித்துள்ளது.

பான்டா, சாமுராய் பிணை முறிகளின் மூலம் 1 பில்லியன் டொலர் திரட்ட நடவடிக்கை

அமைச்சரவையில் அனுமதி பெறப்பட்டதை அடுத்து, சீனாவின் பான்டா, ஜப்பானின் சாமுராய் பிணை முறிகளின் மூலம், 1 பில்லியன் டொலர் நிதியைத் திரட்டும் நடவடிக்கையில் சிறிலங்கா மத்திய வங்கி மற்றும் திறைசேரி அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

சிறிசேனவை போட்டியில் நிறுத்தினால் சுயேட்சை வேட்பாளரை களமிறக்க பசில் திட்டம்

அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை நிறுத்த மகிந்த ராஜபச்ச முடிவு செய்தால், பொதுஜன முன்னணியின் சார்பில் சுயேட்சை வேட்பாளர் ஒருவரை நிறுத்த பசில் ராஜபக்ச திட்டமிட்டுள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மார்ச் 8இல் வெளியாகிறது ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை

சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள, ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை வரும் மார்ச் 8ஆம் நாள் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.