பான்டா, சாமுராய் பிணை முறிகளின் மூலம் 1 பில்லியன் டொலர் திரட்ட நடவடிக்கை
அமைச்சரவையில் அனுமதி பெறப்பட்டதை அடுத்து, சீனாவின் பான்டா, ஜப்பானின் சாமுராய் பிணை முறிகளின் மூலம், 1 பில்லியன் டொலர் நிதியைத் திரட்டும் நடவடிக்கையில் சிறிலங்கா மத்திய வங்கி மற்றும் திறைசேரி அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியை தளர்த்தும் நோக்கில், இந்த நிதியை திரட்டுவதற்காக, ஜப்பான் மற்றும் சீனாவுக்கு, திறைசேரி, மத்திய வங்கி அதிகாரிகள் விரைவில் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
பான்டா, சாமுராய் பிணை முறிகளின் மூலம் தலா 500 மில்லியன் டொலர் நிதியை திரட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக, திறைசேரி மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அத்துடன், டொலர் நெருக்கடியைச் சமாளிக்க யூரோ பிணை முறி மூலம் நிதி திரட்டவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.