மேலும்

சிறிசேனவை போட்டியில் நிறுத்தினால் சுயேட்சை வேட்பாளரை களமிறக்க பசில் திட்டம்

அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை நிறுத்த மகிந்த ராஜபச்ச முடிவு செய்தால், பொதுஜன முன்னணியின் சார்பில் சுயேட்சை வேட்பாளர் ஒருவரை நிறுத்த பசில் ராஜபக்ச திட்டமிட்டுள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு வெற்றிபெறும் வலு கிடையாது என்றும் அவரை அதிபர் வேட்பாளராக நிறுத்தினால் தோல்வியடைவார். பசில் ராஜபக்ச கருதுகிறார்.

அவ்வாறு தோல்வியடைந்தால் அது நாடாளுமன்றத் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பசில் ராஜபக்சவின் கணிப்பாக உள்ளது.

எனினும், கோத்தாபய ராஜபக்சவுக்கு சிறுபான்மையின மக்கள் ஆதரவு அளிக்கமாட்டார்கள் என்பதால்,  மைத்திரிபால சிறிசேனவை போட்டியில் நிறுத்த மகிந்த ராஜபக்ச விரும்புவதாக உள்ளக வட்டாரங்கள் தெரிவித்தன.

அவ்வாறான நிலை ஏற்பட்டால், சிறிலங்கா பொதுஜன முன்னணி சுயேட்சை வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் என்றும் அதற்கான ஏற்பாடுகளை பசில் ராஜபக்சவுக்கு நெருக்கமானவர்கள் மேற்கொண்டு வருவதாகவும், அறியப்படுகிறது.

அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதை விட பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதையே பொதுஜன முன்னணி கூடுதல் கவனம் செலுத்துவதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *