மேலும்

முக்கிய ஆலோசனையில் மகிந்த – வெளியேற்ற முடியாதென சூளுரை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சிறிலங்காவின் பிரதமர் மகிந்த ராஜபக்ச தற்போது முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கூட்டம், சிறிலங்கா பிரதமரின் செயலகத்தில் இடம்பெற்று வருகிறது.

வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் தமது அரசாங்கத்தின் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பது குறித்து, இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

அதேவேளை, இன்று வீரகெட்டியவில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ச, பலவந்தமாகவோ, சட்டத்துக்கு மாறாகவோ, தன்னைப் பதவியில் இருந்து நீக்குவது இலகுவானதல்ல என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *