உச்சநீதிமன்றப் பகுதியில் பதற்றம்
சிறிலங்கா உச்சநீதிமன்றத்துக்கு வெளியே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பாக உத்தரவை வழங்கக் கோரி நூற்றுக்கணக்கானோர் திரண்டு முழக்கம் எழுப்பி வருகின்றனர்.இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எதிர்பார்த்து ஏற்கனவே அங்கு பெருமளவானோர் குவிந்துள்ளனர்.
இன்று காலையில் இருந்தே உச்சநீதிமன்றப் பகுதியில் பெருமளவு காவல்துறையினரும், சிறப்பு அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ள நிலையில், பதற்றநிலை தீவிரமடைந்து வருகிறது.
உச்சநீதிமன்ற உத்தரவு 5 மணிக்குப் பின்னர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அதன் பின்னர் வன்முறைகள் நிகழலாம் என்றும் அச்சம் எழுந்துள்ளது.