மேலும்

சிறிலங்கா அரசியல் குழப்பங்களில் சீனா தலையிடாதாம்

சிறிலங்காவின் உள்நாட்டு அரசியல் குழப்பங்களில் சீனா தலையீடு செய்யாது என்று, கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்துடன் நெருக்கமான தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

முன்னதாக, நேற்றுமாலை சீன தூதுவர் செங் ஷியுவான் சிறிலங்காவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

அத்துடன் சீன அதிபர் ஷி ஜின்பிங் கொடுத்தனுப்பிய வாழ்த்துச் செய்தியையும், மகிந்த ராஜபக்சவிடம் கொடுத்திருந்தார்.

அதன் பின்னர், அலரி மாளிகைக்குச் சென்ற சீனத் தூதுவர் செங் ஷியுவான், ரணில் விக்ரமசிங்கவையும் சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார்.

இந்த நிலையிலேயே,  உள்நாட்டு அரசியல் குழப்பங்களில் சீனா தலையீடு செய்யாது என்று, கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்துடன் நெருக்கமான தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *