46 ஆவது தலைமை நீதியரசராகப் பொறுப்பேற்கிறார் நளின் பெரேரா
சிறிலங்கா உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதியரசராக, நீதியரசர் நளின் பெரேரா நியமிக்கப்படவுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் அவரது பெயர் நேற்று முன்மொழியப்பட்டது.
இன்று நண்பகல் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் நடந்த அரசியலமைப்பு சபையின் கூட்டத்தில், நீதியரசர் நளின் பெரேராவை புதிய தலைமை நீதியரசராக நியமிக்க அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக, சிறிலங்கா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக, சபாநாயகர் செயலகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, சிறிலங்காவின் 46 ஆவது தலைமை நீதியரசராக நளின் பெரேரா பொறுப்பேற்கவுள்ளார்.