மேலும்

மாதம்: September 2018

புதுடெல்லியில் கருத்துக் கூற மறுத்த மகிந்த

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுவிக்க தமிழ்நாடு அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளமை குறித்து கருத்து வெளியிட, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மறுப்புத் தெரிவித்துள்ளார்.

மெதுவாகச் செயற்படுகிறது சிறிலங்கா – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் குற்றச்சாட்டு

நிலைமாறு கால நீதி நிகழ்ச்சி நிரலை அர்த்தமுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதில் சிறிலங்கா அதிகாரிகள் மிகவும் மெதுவாகவே செயற்படுகின்றனர் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையார் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பொருளாதாரத் திட்டங்களை விரைவுபடுத்த சிறிலங்கா நாடாளுமன்றக் குழு இணக்கம்

சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான சிறிலங்காவின் அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.

அரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன்

அரசியலை விட்டு வெளியேறி, தமிழ் மக்களின் உரிமைக்காக போராடும் ஒரு மக்கள் அமைப்புடன் இணைந்து கொள்வதையே தாம் விரும்புவதாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அட்மிரல் விஜேகுணரத்னவின் மெக்சிகோ பயணத்துக்கு ‘பச்சைக்கொடி’ காண்பித்த சிறிலங்கா அதிபர்

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தமக்கு வாக்குமூலம் அளிக்கத் தவறியுள்ளார் என்று நீதிமன்றத்துக்கு அறிவிக்கப் போவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜெனரல் அமல் கருணாசேகரவுக்குப் பிணை

சிறிலங்காவின் முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர், மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் வழக்கில், இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

ஒரே நாளில் மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்த்தப்பட்ட இரட்டைச் சகோதரர்கள்

சிறிலங்கா இராணுவத்தின் வரலாற்றில் முதல் முறையாக இரட்டைச் சகோதரர்கள் ஒரே நாளில் மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்படவிருந்த அட்மிரல் அதிகாலையில் வெளிநாட்டுக்குத் தப்பியோட்டம்

குற்றப் புலனாய்வுப் பிரிவினால் இன்று காலை விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த, சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்று அதிகாலை நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றக் குழு இன்று மோடி, சுஷ்மாவைச் சந்திக்கிறது

இரா.சம்பந்தன், டக்ளஸ் தேவானந்தா, மனோ கணேசன் ஆகியோரை உள்ளடக்கிய சிறிலங்கா நாடாளுமன்றக் குழு இன்று இந்திய குடியரசுத் தலைவர், பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளது.

நாமலுடன் இன்று புதுடெல்லிக்குப் பறக்கிறார் மகிந்த – மோடி, டோவல், சோனியாவை சந்திக்க வாய்ப்பு

மூன்று நாட்கள் பயணமாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று இந்தியாவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார். பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமியின் அழைப்பின் பேரிலேயே அவர் இந்தியா செல்கிறார்.