மேலும்

நாள்: 2nd September 2018

கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கைப் புறக்கணித்த சரத் பொன்சேகா

சிறிலங்கா இராணுவம் நடத்திய கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கை, சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா புறக்கணித்தார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

கொழும்பில் பலம் காட்ட முனையும் கூட்டு எதிரணி- முறியடிப்பு முயற்சியில் அரசு தீவிரம்

சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக, எதிர்வரும் 5ஆம் நாள் கொழும்பில் பாரிய பேரணி ஒன்றை நடத்துவதற்கு மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணி தயாராகி வரும் நிலையில், இந்தப் பேரணியை முறியடிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கமும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சிறிலங்காவின் புதிய தலைமை நீதியரசர் பதவிக்கு ஜெயந்த ஜெயசூரிய

சிறிலங்கா உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதியரசராக, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரியவை நியமிப்பதற்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

முதலில் விக்னேஸ்வரன் மனதளவில் தயாராக வேண்டும் – சுரேஸ் பிரேமச்சந்திரன்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இரண்டாவது பதவிக்காலத்துக்குப் போட்டியிட தயாரானால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அணி ஊடாக அவரைக் கொண்டு வருவது பற்றிக் கலந்துரையாடத் தயாராக இருப்பதாக, ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கருப்புப் பட்டியலில் 30 ஆயிரம் சிறிலங்கா படையினர் – நாட்டை விட்டு வெளியேறத் தடை

நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டு – 62,338  இலங்கையர்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று மூத்த அரச புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் குழு சிறிலங்காவில் பயணம்

பாகிஸ்தான் இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் நால்வரைக் கொண்ட குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

விக்னேஸ்வரனுக்கு பொறுமையாகப் பதில் கொடுப்பேன் – இரா.சம்பந்தன்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பாக விரிவாக ஆராய்ந்து விட்டுப் பொறுமையாகப் பதிலளிப்பேன் என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

ஒரே நேரத்தில் புதுடெல்லியில் முகாமிடும் மகிந்த, சம்பந்தன், மனோ, டக்ளஸ், ஹக்கீம், றிசாத்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச புதுடெல்லி செல்லவுள்ள அதே காலப்பகுதியில் இந்திய அரசின் அழைப்பின் பேரில், இரா.சம்பந்தன், டக்ளஸ் தேவானந்தா, மனோ கணேசன் உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் அங்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

ரஷ்யாவிடம் 2568 ஏ.கே – 47 துப்பாக்கிகளை கொள்வனவு செய்கிறார் சரத் பொன்சேகா

சிறிலங்காவின் வனவாழ் உயிரினங்கள் திணைக்களத்துக்கு 42 மில்லியன் ரூபா செலவில் 2568 ஏ.கே-47 துப்பாக்கிகளை கொள்வனவு செய்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இந்த வாரம் கைது செய்யப்படுகிறார் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன

சிறிலங்காவின் மிக மூத்த படை அதிகாரியான-  பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இந்த வாரம் கைது செய்யப்படுவார் என்றும், அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.