மேலும்

நாள்: 25th September 2018

திலீபன் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை கோரிய மனு நீதிமன்றினால் நிராகரிப்பு

தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வைத் தடை செய்து, உத்தரவிடக் கோரி சிறிலங்கா காவல்துறையினர் தாக்கல் செய்திருந்த மனுவை, யாழ். நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் மாம்பழ உற்பத்தி வலயம் – கறுத்தக்கொழும்பானுக்கு சவாலாகும் ரிஜேசி

சிறிலங்காவின் முதலாவது மாம்பழ உற்பத்தி வலயம், யாழ்ப்பாணம் மற்றும் தம்புள்ள ஆகிய இடங்களில் உருவாக்கப்படவுள்ளது. “நாமே வளர்த்து நாமே சாப்பிவோம்” என்ற தொனிப்பொருளின் கீழ், இந்த விவசாய அபிவிருத்தி திட்டம், முன்னெடுக்கப்படவுள்ளது என்று சிறிலங்காவின் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

திலீபன் நினைவேந்தலை தடுக்கும் சிறிலங்காவின் முயற்சி – நீதிமன்றில் இன்று முக்கிய விசாரணை

தியாகதீபம் திலீபனின் நினைவு நிகழ்வை நடத்துவதற்கு தடைவிதிக்கக் கோரி, யாழ். மேல் நீதிமன்றில் சிறிலங்கா காவல்துறையினர் தாக்கல் செய்துள்ள மனு மீது இன்று விசாரணை நடத்தப்படவுள்ளது.

குச்சவெளியில் நாளை இறுதிக்கட்டப் போர் ஒத்திகை

சிறிலங்கா இராணுவத்தின் ஏற்பாட்டில், முப்படைகளும், வெளிநாட்டுப் படையினரும் இணைந்து பங்கேற்று வரும், நீர்க்காகம் கூட்டுப் பயிற்சியின் இறுதி தாக்குதல் ஒத்திகை நாளை திருகோணமலை குச்சவெளி கடற்கரையில் இடம்பெறவுள்ளது.

சாவகச்சேரியில் இரண்டு காற்றாலை மின் திட்டங்கள் – 28 மில்லியன் டொலர் முதலீடு

சாவகச்சேரியில், தலா 10 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு காற்றாலைகள் அமைக்கப்படவுள்ளன. தேசிய அபிவிருத்தி வங்கிக்கும், சீலெக்ஸ் நிறுவனத்துக்கும் இடையில் இது தொடர்பான கடன் உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.

கோத்தா பற்றிப் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை – குமார வெல்கம

அடுத்த அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச போட்டியிடுவது பற்றிப் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்று, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவிடம் இன்று விசாரணை

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் இன்று விசாரணை நடத்தப்படவுள்ளது.

புலனாய்வு அறிக்கைகளுக்கு அமையவே பாதுகாப்பு – சிறிலங்கா இராணுவத் தளபதி

புலனாய்வுப் பிரிவுகள் பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கும் மதிப்பீடுகளின் அடிப்படையில் தான், அச்சுறுத்தல் உள்ளவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.