மேலும்

நாள்: 15th September 2018

தியாக தீபம் திலீபனின் 31 ஆவது நினைவேந்தல் உணர்வுபூர்வமாக ஆரம்பம்

இந்திய – சிறிலங்கா அரசுகளிடம் நீதி கோரி – 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வு பூர்வமாக ஆரம்பமானது.

சட்டமா அதிபர் திணைக்களம், குற்றப் புலனாய்வுப் பிரிவு மீது பாய்ந்த சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா படை அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, இன்னமும் வழக்குகளைத் தாக்கல் செய்ய முடியாத நிலையிலேயே குற்றப்புலனாய்வுப் பிரிவும், சட்டமா அதிபர் திணைக்களமும் இருப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

அனுராதபுர சிறையில் 8 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்

அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எட்டு தமிழ் அரசியல் கைதிகள் நேற்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போர்க்குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்குமாறு ஐ.நாவைக் கோருவேன் – சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளை நீக்குமாறு ஐ.நாவிடம் கோரப் போவதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நீதித்துறை செயல்முறைகளில் அனைத்துலக தலையீடுகள் அவசியம் – சுமந்திரன்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்குத் தெரியாமல், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன வெளிநாடு சென்றிருக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மைத்திரி, கோத்தா படுகொலைச் சதி – விசாரணையை சிஐடியிடம் ஒப்படைக்க உத்தரவு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரைப் படுகொலை செய்வதற்கான சதித் திட்டம் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொள்ளவுள்ளது.

ஆட்களை வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற சிறிலங்கா இராஜதந்திரி இத்தாலியில் கைது

சட்டவிரோதமாக நான்கு பேரை இத்தாலிக்கு அழைத்துச் செல்ல முயன்ற சிறிலங்கா இராஜதந்திரி ஒருவர் இத்தாலியின் மிலன், மல்பென்சா விமான நிலைய எல்லை காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.