மேலும்

ஒரே நாளில் மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்த்தப்பட்ட இரட்டைச் சகோதரர்கள்

சிறிலங்கா இராணுவத்தின் வரலாற்றில் முதல் முறையாக இரட்டைச் சகோதரர்கள் ஒரே நாளில் மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

பிரிகேடியர்களான புரக செனிவிரத்ன, ஜெயந்த செனிவிரத்ன ஆகியோரே கடந்த 6ஆம் நாள் மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

1965 செப்ரெம்பர் 6ஆம் நாள் பிறந்த இரட்டைச் சகோதரர்களான இவர்கள், ஒரே நாளில் இராணுவத்தில் இணைந்து கொண்டனர். ஒரே நாளிலேயே- தமது 53 ஆவது பிறந்த நாளன்று மேஜர் ஜெனரல்களாகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா இராணுவத்தில் வெவ்வேறு பதவி நிலைகளில் பணியாற்றியுள்ள செனிவிரத்ன சகோதரர்கள், பலவேகய-1, வன்னி விக்ரம போன்ற .இராணுவ நடவடிக்கைகளில் பணியாற்றியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *