றிவிர வாரஇதழ் இணை ஆசிரியரிடம் 4 மணி நேரத்துக்கும் மேல் விசாரணை
றிவிர சிங்கள வாரஇதழின் இணை ஆசிரியரான திஸ்ஸ ரவீந்திர பெரேரா பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினரால் நேற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
றிவிர சிங்கள வாரஇதழின் இணை ஆசிரியரான திஸ்ஸ ரவீந்திர பெரேரா பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினரால் நேற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் கூட்டு எதிரணியின் தரப்பில் ராஜபக்ச குடும்பத்துக்கு வெளியே உள்ளவர்களை வேட்பாளராக நிறுத்துவது குறித்தும் பரிசீலிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார், சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச.
சிறிலங்காவின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக 80 பில்லியன் ரூபாவை (8000 கோடி ரூபா) கொடையாக வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக, சிறிலங்காவின் தேசிய கொள்கைகள், மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா இராணுவம் அல்லது ஏனைய பாதுகாப்பு பிரிவுகளின் அளவு குறைக்கப்பட்டாது என்று சிறிலங்கா அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நேற்று உறுதியளித்துள்ளது.
அமெரிக்க கடற்படையின் சிறப்பு போர்ப் படைப்பிரிவைச் சேர்ந்த படையினர், சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து திருகோணமலையில் கூட்டு பயிற்சி ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.
கோத்தாபய ராஜபக்சவை அதிபர் வேட்பாளராக, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார் என்று வெளியாகிய செய்திக் குறிப்பை, மகிந்த ராஜபக்சவின் ஊடகச் செயலாளரும், கோத்தாபய ராஜபக்சவும் நிராகரித்துள்ளனர்.
புகலிடம் தேடிய, கணவனை சிறிலங்காவுக்கு நாடு கடத்தி இலங்கை தமிழ் குடும்பத்தைப் பிரித்த அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் செயலுக்கு ஐ.நா கண்டனம் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச வரும் செப்ரெம்பர் மாதம், புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று இந்தியாவின் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் குறித்து அண்மையில் முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்து தொடர்பாக, வட மாகாண முதலமைச்சரிடம் சிறிலங்கா காவல்துறையினர் நேற்று விசாரணை நடத்தியுள்ளனர்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றுக் காலை ஜோர்ஜியாவின் தலைநகரான ரிபிலிசியில் உள்ள சோட்டா ருஸ்டாவெலி அனைத்துலக விமான நிலையத்தை சென்றடைந்தார்.