மேலும்

ஜோர்ஜியா சென்றார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றுக் காலை ஜோர்ஜியாவின் தலைநகரான ரிபிலிசியில் உள்ள சோட்டா ருஸ்டாவெலி அனைத்துலக விமான நிலையத்தை சென்றடைந்தார்.

விமான நிலையத்தில் அவரை ஜோர்ஜியாவின் பிரதி அமைச்சர் ஜோர்ஜ் சர்வாஷிட்ஸ் சிறிலங்கா அதிபரை வரவேற்றார்.

இன்று காலை ஆரம்பமாகவுள்ள  ஐந்தாவது திறந்த அரசாங்க பங்குடைமை மாநாட்டில் பங்கேற்கவே சிறிலங்கா அதிபர் ஜோர்ஜியாவுக்குச் சென்றுள்ளார்.

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை மையப்படுத்தியதாக நடைபெறவுள்ள இந்த மாநாடு நாளை நிறைவடையும்.

நாளை ஜோர்ஜியா அதிபர் ஜியோர்கி மார்க்வெலாஸ்விலியை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சந்தித்து இருதரப்புப் பேச்சுக்களை நடத்தத் திட்டமிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *